போலி கட்டளை!

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி  நீதிமன்றில் பொலிஸார் மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில் அதன் மீதான கட்டளை வெளி வரும் முன்னரே நீதிவானின் கட்டளையின் பிரதி போன்ற போலி ஆவணம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் வழக்கு இலக்கமிடப்படவில்லை. திகதிகயில் தவறு. தண்டனைச் சட்டக்கோவை இலக்கம் தவறாக உள்ளதுடன் , நீதிவானின் கையொப்பம் காணப்படவில்லை அத்துடன் கடிதத்தில் எழுத்துப்பிழைகள் , சொற்பிழைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.